search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people involved"

    • வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் முகமது அப்துல்லா (வயது18). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அவரை வழிமறித்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கரும்பாலை பி.டி. காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரவுடி அருண்பாண்டி, வினோத்குமார், பால சக்தி, தமிழ் இனியன், ராமச்சந்திரன், ஹரிவிக்னேஷ், கார்த்தி என்ற எலி கார்த்தி, சோனைமுத்து, கே.கே. நகர் சித்திரவேல் என தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ×