search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pensioner"

    • ஓய்வூதியர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் ஆயுள்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவித்தார்.

    விருதுநகர்

    தொழிலாளர் நல உதவிஆணையர் காளிதாஸ் (சமூக பாதுகாப்பு திட்டம்) கூறியதாவது:-

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுள்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதியர்களின் சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் இணையதளத்தில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நல வாரியங்களில் விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், ஆதார் எண், குடும்ப அட்டை, ஓய்வூதிய ஒப்படைப்பு கணக்குஎண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

    தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் இணையதளம் முகவரியில் ஓய்வூதியதாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணையினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் விண்ணப்பத்தின் எண்கள் அறிய என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண் உள்ளீடு செய்தும் அல்லது பயனாளியின் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.

    ஆயுள் சான்று அளித்த ஓய்வூதியர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால் இதுவரை ஆயுள்சான்று சமர்ப்பிக்காத 790 ஓய்வூதியதாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேற்படி ஓய்வூதிய தாரிடமிருந்து ஆயுள் சான்றை அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வுபெறும் நாளில் ஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறை பணிநீக்கத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அண்ணா பஸ் நிலையம் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்்ப்பாட்டம் நடந்தது.

    ஓய்வூதியர்கள் மீதான நிலுவை ஒழுங்கு நடவ டிக்கைகளின் மீது தாமத மின்றி விசாரணை நடத்தி நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

    ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி நிலுவை இனங்களை தீர்வு காண வேண்டும். ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு பெற்றோர்-ஓய்வு பெற உள்ளவர்களுக்கான தணிக்கைத்தடை கூட்டமர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில, மாவட்ட நிர்வாகிகள் கிருபாகரன் சக்திராஜ், ஜெயராமன், சொக்கலிங்கம், தினகரசாமி, ஜெயசீலன், ராஜேந்திரன், கோமதி, பரமேசுவரன், அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பால்முருகன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினர்.

    அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிறைவு ரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    ×