search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறை பணிநீக்கத்தை கைவிட வேண்டும்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்கத்தினர்.

    ஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறை பணிநீக்கத்தை கைவிட வேண்டும்

    • ஓய்வுபெறும் நாளில் ஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறை பணிநீக்கத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அண்ணா பஸ் நிலையம் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்்ப்பாட்டம் நடந்தது.

    ஓய்வூதியர்கள் மீதான நிலுவை ஒழுங்கு நடவ டிக்கைகளின் மீது தாமத மின்றி விசாரணை நடத்தி நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

    ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி நிலுவை இனங்களை தீர்வு காண வேண்டும். ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு பெற்றோர்-ஓய்வு பெற உள்ளவர்களுக்கான தணிக்கைத்தடை கூட்டமர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில, மாவட்ட நிர்வாகிகள் கிருபாகரன் சக்திராஜ், ஜெயராமன், சொக்கலிங்கம், தினகரசாமி, ஜெயசீலன், ராஜேந்திரன், கோமதி, பரமேசுவரன், அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பால்முருகன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினர்.

    அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிறைவு ரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×