search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patta in Annur"

    • வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • மக்களுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும்.

    அன்னூர்,

    அன்னூர் ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தனித்தனியாக பட்டா இல்லாத காரணத்தினால் ஒரு வீட்டில் மூன்று முதல் நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதனால் கடந்த மாதம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி குடியிருப்பு அருகே மோதியதில் ஒருவர் பலியாகினார். இந்த விபத்துக்களை தவிர்க்க தனித்தனியாக பட்டா வழங்கக்கோரி ஏற்கனவே கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அவர்களின் பரிந்துரையின் படி நேற்று அன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

    ×