search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patrol police"

    • ரோந்து போலீசார் பேருந்தை ரத்தி சென்று ரூ.1.35 லட்சம் ரொக்கம், உடமைகளை மீட்டு ஒப்படைத்தனர்
    • டீ சாப்பிட இறங்கிய முதியவரை தவிக்க விட்டு சென்ற பஸ்

    பெரம்பலூர்

    சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் முதியவர் ஒருவர் பயணித்தார். பேருந்து பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் பயணிகளை இறக்குவதற்காக சற்று நேரம் நின்று கொண்டிருந்தது. அப்போது முதியவர் டீ சாப்பிட கீழே இறங்கியுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தான் வந்த பஸ்சை காணவில்லை எனவும், தன்னுடைய உடைமைகள் அனைத்தும் அந்த பஸ்சில் இருப்பதாகவும், எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் ரோந்து பணியிலிருந்த சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமியிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண்1 - ல் பணியிலிருந்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், போலீசார் சக்திவேல், அரவிந்தன் ஆகியோர்கள் திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த அரசு பஸ்சை நிறுத்தி , முதியவரின் பணப்பை மற்றும் உடைமைகள் அடங்கிய பையை எடுத்து பையை பறிக்கொடுத்த முதியவரை வரவழைத்து அவரது உடைகள் மற்றும் அதிலிருந்த பணம் ரூபாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆகியவற்றை ஒப்படைத்தும் முதியவரை மீண்டும் சென்னை செல்வதற்கு வேறொரு பஸ்சில் ஏற்றி விட்டனர். முதியவர் தவறவிட்ட ஒரு மணிநேரத்தில் உடைமைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து எண்-1 காவல்துறையினரை எஸ்பி மணி பாராட்டி வாழ்த்தினார்.

    ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயணப்படி வழங்குவது தொடர்பாக 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBench
    மதுரை:

    ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்படுவதில்லை என வந்த தகவலை, மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்படுவதில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அதற்காக அவர்கள் இரு சக்கர அல்லது 4 சக்கர வாகனங்களில் செல்வர்.

    அவ்வாறு பணி காரணமாக செல்லும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான பெட்ரோல் படி வழங்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

    இதற்காக அவர்கள் தங்களின் ஊதியத்தை செலவிடும் நிலை உள்ளது. காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுவது அடிக்கடி நிகழும் சூழலில் இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் ரோந்து பணிகளில் ஈடுபடுவதை காவல்துறையினர் தவிர்க்கும் சூழலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

    எனவே, ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான படியை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கிராமப்புற, நகர்புறங்களுக்கு ரோந்து பணிகளுக்குச் செல்லும் காவலர்களுக்கு அவர்கள் ரோந்துப்பணி செல்லும் பகுதிகள், வாகனங்களின் எண்ணிக்கை, செலவாகும் எரிபொருள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயணப் படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

    குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை பயணப்படியாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு, 2 மாதத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடுவதாக கூறி, வழக்கை முடித்து வைத்தனர். #MaduraiHCBench
    ×