என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panimaya Matha Temple"

    • ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும்.

    இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு நேற்று மாலை கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கூட்டுத் திருப்பலி முடிந்ததும் காலை 8.45 மணியளவில் பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை ஏற்றினர்.

    அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

    மேலும் விழாவை முன்னிட்டு துறைமுகபகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் செய்து வருகிறனர்,

    மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 2 ஏ.டிஎஸ்.பி.கள் 1 ஏ.எஸ்.பி., 5 டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர்கள், 35 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

    பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை பாதிரியார் லெனின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து நகர வீதிகளில் கொடி பவனி நடக்கிறது.
    • எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்களுடன் காணிக்கை பவனி நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை)மாலை 5 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சிக்குப் பின் 6மணிக்கு பாதிரியார் லெனின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து நகர வீதிகளில் கொடி பவனி, எளியோருக்கும் திருவழிபாட்டுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்களுடன் காணிக்கை பவனி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான குமார்ராஜா,உதவி பங்குத்தந்தை பால் ரோமன்,களப்பணியாளர் பெல்கிளின்டன், மற்றும் பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    ×