என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pakistan Boy"
- திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிறுவனை ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள்.
- ஆர் வேர்ல்ட் போட்டோகிராபி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய கச்சா பாதாம் பாடலுக்கு இந்தி பிரபலங்கள் முதல் வி.ஐ.பி.க்கள் பலரும் நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வேர்க்கடலை வியாபாரியான பூபன் பத்யாகர் என்பவர் இந்த பாடலை பாடி இருந்தார். அவர் வியாபாரம் செய்த போது கச்சா பாதாம் என்ற பாடலை பாடி மகிழ்ந்துள்ளார். அதனை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர அது உலக அளவில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிறுவனை ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள். இதனால் அந்த சிறுவனும் உற்சாகமாக கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். ஆர் வேர்ல்ட் போட்டோகிராபி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது.
- இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லையான பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை மீட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவனான அவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சிறுவனை அவனது தந்தை மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்