search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப்பில் இந்திய எல்லைக்கு வழி தவறி வந்த பாகிஸ்தான் சிறுவன்
    X

    பஞ்சாப்பில் இந்திய எல்லைக்கு வழி தவறி வந்த பாகிஸ்தான் சிறுவன்

    • பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது.
    • இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லையான பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை மீட்டனர்.

    பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவனான அவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சிறுவனை அவனது தந்தை மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×