search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan army chief"

    • அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்காக ராணுவ தளபதி நியமனம் அனுப்பப்பட்டுள்ளது
    • ராணுவ தளபதி நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் காமர் ஜாவேத் பாஜ்வாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அவர் ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய ராணுவ தளபதிக்கான பரிந்துரைகள் அடங்கிய குறிப்பினை அதிபருக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுப்பிவைத்துள்ளார். அதில், பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் ஆசிம் முனிர் என்பவரை பாகிஸ்தான் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். இந்த அறிவிப்பை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் வெளியிட்டுள்ளார்.

    அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்காக இந்த நியமனம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதிபர் தாமதம் செய்யாமல் இன்றே ஒப்புதல் வழங்குவார் என்றும், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நம்பிக்கை தெரிவித்தார்.

    எனினும், புதிய தளபதி நியமனம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ராணுவத்தின் உயரிய உளவுப் பிரிவான இண்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் தலைவரான முனீரை அவர் நியமிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குள் இம்ரான் கான் நீக்கியிருந்தார். அவருக்குப் பதிலாக தனக்கு நெருக்கமான ஒரு அதிகாரியை நியமித்தார்.

    ஆசிம் முனிர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, புதிய ராணுவ தளபதி நியமனத்தால் பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவத்துக்குமான மோதலையும் அதிகப்படுத்தலாம்.

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் தேச துரோகத்தில் ஈடுபட்டதாக சித்து மீது புகார் மனு தாக்கல் செய்தார். #NavjotSinghSidhu
    முசாபர்பூர்:

    கடந்த 18-ந்தேதி நடந்த பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டித் தழுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.



    சித்துவின் இந்த செயலுக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ‘எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் பலர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவி இருப்பது என்னைப்போன்ற ஏராளமான இந்தியர்களின் உணர்வை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது, நாட்டுக்கு தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கேலி செய்வதாகவும் உள்ளது. எனவே சித்து மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு வருகிற 24-ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.  #NavjotSinghSidhu
    ×