search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ORDINARY MEETING"

    • ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடை–பெற்றது.

    கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்நக–ராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் கருணா–நிதி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறை–வேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வ–ராஜ், அம்பிகாபதி, ராஜ–மாணிக்கம், ரங்கநாதன், சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்காஆனந்த், சமந்தா பாய், மீனாட்சி நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர்ராஜகோ–பாலன் பணி மேற்பார்வை–யாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட–னர்.

    கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் வரி போன்ற–வற்றில் ஏலம் எடுத்தவர்கள் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் பாக்கி தொகை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைந்து அதை வசூலிக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் பல உறுப்பின–ர்கள் அடிப்படை வசதி–களான தார் சாலை சிமெண்ட் சாலை தெருவிளக்கு உள்ளிட்டவற்றைப் பற்றி கோரிக்கை விடுத்தனர். முடிவில் நகராட்சி மேலா–ளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.

    • மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
    • 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கரூர்

    கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் நேற்று சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். இதில் துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால் மனோகரா கார்னர், ஆர்.எம்.எஸ் அஞ்சல் அலுவலகம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் மற்றும் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவும் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போன்றவைகளை நடத்த அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு அதிகப்படியான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×