search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி சாதாரண கூட்டம்
    X

    மாநகராட்சி சாதாரண கூட்டம்

    • மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
    • 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கரூர்

    கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் நேற்று சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். இதில் துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால் மனோகரா கார்னர், ஆர்.எம்.எஸ் அஞ்சல் அலுவலகம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் மற்றும் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவும் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போன்றவைகளை நடத்த அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு அதிகப்படியான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×