என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாதாரண கூட்டம்
- ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
- அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடை–பெற்றது.
கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்நக–ராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் கருணா–நிதி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறை–வேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வ–ராஜ், அம்பிகாபதி, ராஜ–மாணிக்கம், ரங்கநாதன், சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்காஆனந்த், சமந்தா பாய், மீனாட்சி நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர்ராஜகோ–பாலன் பணி மேற்பார்வை–யாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட–னர்.
கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் வரி போன்ற–வற்றில் ஏலம் எடுத்தவர்கள் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் பாக்கி தொகை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைந்து அதை வசூலிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் பல உறுப்பின–ர்கள் அடிப்படை வசதி–களான தார் சாலை சிமெண்ட் சாலை தெருவிளக்கு உள்ளிட்டவற்றைப் பற்றி கோரிக்கை விடுத்தனர். முடிவில் நகராட்சி மேலா–ளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்