என் மலர்
நீங்கள் தேடியது "online gambling games"
- பாராளுமன்றத்தில் ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றப்பட்டது.
- ஆன்லைன் மசோதா அமலானபின் 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேலும் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி உத்தரவிட்டது. ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசு கூறுகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மசோதா அமலானபின், 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
- ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
- ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அதிரடி.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






