search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "om raut"

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் பல சர்ச்சை கருத்துகளை எதிர்கொண்டு வருகிறது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு தடை விதிக்க கோரி பலரும் கடிதம் எழுதி வருகின்றனர்.

    இந்நிலையில், 'ஆதிபுருஷ்'படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு ராமாயணத்தை தான் படிக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சர்யம். அனுமனும் சீதையும் முக்கியமில்லாதவர்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இதுமாதிரியான விஷயங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்பட்டிருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்ப்பவையாக இருக்கிறது.

    இது போன்ற படங்களை பார்ப்பது மிகவும் கடினம். படத்தை முறையாக சென்சார் செய்ய தணிக்கை வாரியம் ஏன் தவறியது? சொலிசிடர் ஜெனரல் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், காட்சிகளை என்ன செய்வது? இது தொடர்பாக தணிக்கை வாரியத்திடம் கேள்வி கேளுங்கள். பின்னர் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். ஒருவேளை இந்தப் படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

    படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக் கொண்டு பொறுப்புத் துறப்பு பதிவிட்டிருந்தோம் என்று படக்குழு தரப்பு வாதிடுவது விநோதமாக இருக்கிறது. நீங்கள் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் அல்ல என்று பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்... அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.

    மேலும், விசாரணையின்போது தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை என்று கேட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    • ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் வெளியான நாளில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர். இப்படம் பல எதிர்ப்புகளை சந்தித்திருந்தாலும் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 410 கோடியை வசூல் செய்துள்ளது.

    இந்த நிலையில் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மும்பை காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் "கடந்த ஜூன் 16-ந்தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஆதிபுருஷ்' திரைப்படம் பகவான் ராமர், தேவி சீதா மற்றும் ராம பக்தரான அனுமான் ஆகியோரை வணங்கும் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் 

    மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முயல்வது ராமாயணத்தின் மீதான எங்கள் நம்பிக்கை குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ், எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் ராமாயணத்தை கேலி செய்யும் வகையில் கதைக்களத்தையும், வசனங்களையும், உடை அலங்காரங்களையும் மாற்றி அமைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

    இந்து மதம் மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் படத்தின் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு பரீட்சையமான ராமாயண கதையை 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் தங்கள் ரசனைக்கு ஏற்ப முற்றிலுமாக திரித்துள்ளனர். எனவே ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர் டி-சீரிஸ் பூஷன் குமார், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர் சுக்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.




    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.


    ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர்.


    ஆதிபுருஷ் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ.410 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தின் வெளியீட்டை பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் வெளியான தியேட்டர்களில் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தங்களின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பிரபாசின் தீவிர ரசிகர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள யெம்மிகனூரில் மாட்டு வண்டி பேரணி நடத்தினர்.


    பேரணி நடத்திய ரசிகர்கள்

    அதில் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்துள்ள பிரபாசின் போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரபாஸ் ராமர் வேடத்தில் இருக்கும் பிரமாண்ட கட் அவுட்டுகள் மாட்டு வண்டியில் இடம் பெற்றிருந்தன. பிரபாஸைப் புகழ்ந்து ரசிர்கள் கோஷம் எழுப்பினர். பெரிய திரையில் தெய்வீக ராமர் கதாப்பாத்திரத்தை சித்தரிக்க அவர்தான் சரியான தேர்வு. வாழும் கடவுள் என்று ஆர்வத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் இன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.


    நெட்டிசன்கள் பகிர்ந்த காட்சிகள்

    இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 500 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான படமா இது..? ஒரு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு 'ஆதிபுருஷ்' திரைப்படம் எடுத்துக்காட்டாக உள்ளது என்று சமூக வலைதளத்தில் காட்சிகளை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் 'ஆதிபுருஷ்' படத்தின் பத்தாயிரம் டிக்கெட்டுகளை பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தெலங்கானாவில் அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க உள்ளதாக "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.


    இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ், "ஆதிபுருஷ் திரைப்படத்தை சினிமா என்று சொல்லக்கூடாது. இது ராமாயணம். இந்த படத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம். ராமர் அனைத்து மக்களின் இதயத்திலும் இருக்கிறார். அப்படிப்பட்ட மகானாக நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை கடவுளின் அருளாக நினைக்கிறேன்.


    கீர்த்தி சனோன் -பிரபாஸ்

    இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்தபோது நடிகர் சிரஞ்சீவி நீ ராமராக நடிக்கிறாயா? என்று கேட்டார். ஆமாம் சார் என்று சொன்னேன். அது உண்மையில் அதிர்ஷ்டம். அனைவருக்கும் கிடைக்காது. உனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லி பாராட்டினார். ஆண்டுக்கு இனி இரண்டு மூன்று படங்களில் நடிப்பேன்'' என்று கூறினார்.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஆதிபுருஷ்’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.


    இந்த நிலையில் 'ஆதிபுருஷ்' படக்குழுவினருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ஆதிபுருஷ்' படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஒரு பான் இந்திய நடிகராக இருந்துகொண்டு ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இன்றைய தலைமுறைக்கு ராமாயணத்தை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சாதனை. படம் பிரம்மாண்ட வெற்றியடைய என்னுடைய பிரார்த்தனைகள். ஹரே ராம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் டிக்கெட்டுகளை அரசு பள்ளி மாணவரகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

    இந்நிலையில் தெலங்கானாவில் அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க உள்ளதாக "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக, 10 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

    • பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    • இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    ஓம் ராவத் -கீர்த்தி சனோன்

    இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது தரிசனத்தை முடித்துவிட்டு காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். கோவிலின் முன் இயக்குனர் ஓம் ராவத் இவ்வாறு செய்தது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


    ஓம் ராவத் -கீர்த்தி சனோன்

    இந்நிலையில், திருப்பதி கோவிலில் வைத்து நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் முத்தமிட்டதற்கு ஆந்திர மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு வந்தவர்கள் அதன் புனிதத்தை காக்க வேண்டும். உடனடியாக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து முத்தமிட்ட இயக்குனர் ஓம் ராவத்

    இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வெளியே வந்த படக்குழுவினர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இயக்குனர் ஓம் ராவத்தின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • நடிகர் பிரபாஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது.


    இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள 'வந்து கொண்டிருக்கிறேன் இராவணா. வந்துகொண்டிருக்கிறேன் தர்மத்தின் இரு பாதங்களை கொண்டு அதர்மத்தின் பத்து தலைகளை கொய்ய' போன்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    இதற்கு முன்பு வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் டீசரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாக பல சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.



    ×