search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருப்பதியில் காவிகொடிகள்.. ஜெய்ஸ்ரீராம் வாசகங்களுடன் ஆதிபுருஷ் திரைப்பட விழா ஏற்பாடு மும்முரம்
    X

    ஆதிபுருஷ்

    திருப்பதியில் காவிகொடிகள்.. ஜெய்ஸ்ரீராம் வாசகங்களுடன் ஆதிபுருஷ் திரைப்பட விழா ஏற்பாடு மும்முரம்

    • நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
    • இப்படம் 3டி முறையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட 'ஆதிபுருஷ்' திரைப்படம் 3டி முறையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ள திரையரங்குகளின் முன் இருக்கையில் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.



    'ஆதிபுருஷ்' பட விழா இன்று இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ள வரும் ரசிகர்களுக்காக மைதானத்தின் உள்ளே பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தை சுற்றிலும் காவி கொடிகள், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு உள்ளது. விழாவில் 200 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆட உள்ளதாக கூறப்படுகிறது.


    இந்த விழாவில் 'ஆதிபுருஷ்' கதாநாயகன் பிரபாஸ் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    திருப்பதியில் பிரபாஸ்

    இதையடுத்து 'ஆதிபுருஷ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு நடிகர் பிரபாஸ் மற்றும் பட குழுவினர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் திருப்பதிக்கு வந்தனர். நேற்று இரவு திருமலைக்கு வந்த நடிகர் பிரபாஸுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, பிரபாஸ் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    பிரபாஸ் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×