search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old man kills"

    • லோகநாதன் (70 தனது சொந்த வேலையை முடித்துவிட்டு, துறையூர் பாலக்கரையில் இருந்து சொரத்தூர் செல்வதற்காக சிலோன் ஆபீஸ் அருகே சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் லோகநாதன் பலியானார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மேட்டு சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (70). இவர் சம்பவத்தன்று துறையூரில் தனது சொந்த வேலையை முடித்துவிட்டு, துறையூர் பாலக்கரையில் இருந்து சொரத்தூர் செல்வதற்காக சிலோன் ஆபீஸ் அருகே சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம், சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், வாகனத்தின் ஓட்டுநரான தோனூர் கிராமத்தைச் சேர்ந்த சாய் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை தச்சநல்லூரில் கொசுவர்த்தி சுருள் எரிந்து படுக்கையில் தீப்பிடித்ததால் தூங்கி கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரில் உள்ள மாவடிக்குளத் தாங்கரை பகுதியை சேர்ந்தவர் ராமையா (வயது80). விவசாயி. இவர் படுக்கும் போது தினசரி கொசுவர்த்தி சுருள் கொளுத்தி வைப்பது வழக்கம். அதுபோல கடந்த 4-ந்தேதியும் இவர் கொசுவர்த்தி சுருளை தீயில் கொளுத்தி படுக்கை ஓரத்தில் வைத்து விட்டு தூங்கினார்.

    இதில் கொசுவர்த்தி சுருள் எரிந்து படுக்கையில் தீப்பிடித்தது. தூங்கி கொண்டிருந்த முதியவரால் எழுந்து போக முடியாததால், அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு ராமையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ×