என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Office opening"

    • புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜகுமாரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி : 

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 10 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக ஊத்துக்குளியில் புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனி அம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ,திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜகுமாரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தெள்ளார் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு
    • கொடி ஏற்றப்பட்டது.

    வந்தவாசி

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் தெள்ளார் பஸ் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா யொட்டி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தெள்ளார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.

    பின்னர் தெள்ளார் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், வந்தவாசி நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால், இளங்கோவன், பிரபு, வந்தவாசி நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார், பொறியாளர் அணி செயலாளர் யுவராஜ், திமுக நிர்வாகிகள் மதன்குமார்,கோபிநாத், பிச்சைக்கண்ணு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×