search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "odisha youth"

    • ேகாவிலுக்குள் ஒடிசா வாலிபர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மந்தை அம்மன் ேகாவில் என்கின்ற ஆதி பராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் கோவிலின் கதவுகளை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்ப வர்கள் சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் பூட்டிய கோவிலுக்குள் இருப்பதையும், அவர் விளக்குகள் ஏற்றக்கூடிய பகுதியில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைந்து போட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் நிர்வாகி ராமசாமியை அழைத்து கோவில் பூட்டை திறந்து கோவிலுக்குள் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது. அவரிடம் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம வாலிபர் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த சம்பவம் அவனி யாபுரம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மடிப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிந்த ஒரிசா வாலிபரை போலீசார் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #Facebook
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநில வாலிபர் ஒருவர் அலைந்து திரிவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மடிப்பாக்கம் பஸ்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த மடிப்பாக்கம் போலீசார், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் தேவேந்திர பியான் (21). ஒரிசா மாநிலம் பலேசோர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    தொடர்ந்து விசாரித்த போது ஒரு போன் நம்பரை சொன்னார். அதன்மூலம் அந்த வாலிபரின் ‘பேஸ்புக்’ தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். ஐ.டி.ஐ. படித்த இவர் 20-நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு பிட்டர் வேலைக்காக சென்றதும், அங்கு ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் கேரளாவில் ரெயில் ஏறி சென்னை வந்த அவர் மடிப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த தேவேந்திரபியான் உறவினரும், நண்பர்களும் ஒரிசாவில் இருந்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் வாலிபர் தேவேந்திரபியான் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும், உறவினர்கள் வரும் வரை வாலிபருக்கு பாதுகாப்பு கொடுத்த தொண்டு நிறுவன பிரமுகர் நாராயணனுக்கும் வாலிபரின் உறவினரும் நண்பர்களும் நன்றி தெரிவித்தனர். #Facebook
    ×