search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலுக்குள் புகுந்த ஒடிசா வாலிபர்-போலீசார் விசாரணை
    X

    கோவிலுக்குள் புகுந்த ஒடிசா வாலிபர்-போலீசார் விசாரணை

    • ேகாவிலுக்குள் ஒடிசா வாலிபர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மந்தை அம்மன் ேகாவில் என்கின்ற ஆதி பராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் கோவிலின் கதவுகளை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்ப வர்கள் சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் பூட்டிய கோவிலுக்குள் இருப்பதையும், அவர் விளக்குகள் ஏற்றக்கூடிய பகுதியில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைந்து போட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் நிர்வாகி ராமசாமியை அழைத்து கோவில் பூட்டை திறந்து கோவிலுக்குள் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது. அவரிடம் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம வாலிபர் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த சம்பவம் அவனி யாபுரம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×