என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Paneer Selvam"

    • சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
    • சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். 

    தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காத நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு நடந்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-இன் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி தெளிவற்ற சூழல் நிலவும் நிலையில், இருவரின் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்த தவறவில்லை.

    கடைமடை பகுதி வரை காவிரி தண்ணீர் முழுவதுமாக சென்றுவிட்டது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Cauvery #PaneerSelvam

    சென்னை:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாபெரும் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதை பலர் அரசியலாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.

    வெள்ளப்பாதிப்பை தடுக்கவும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை தடுக்கவும், தமிழக அரசு 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்கப்படுகிறது.


    காவிரி, வைகை கரை யோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்களில் நட மாடுவது, செல்பி எடுப்பது போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    கடைமடை பகுதிவரை காவிரி தண்ணீர் முழுவதுமாக சென்றுவிட்டது. தேனி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக பாதை தடை செய்யப்பட்டுள்ளது. நானும் கலெக்டரும் ஆய்வு செய்தோம். விரைவில் நிலச் சரிவு பகுதி சீர் செய்யப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Cauvery #PaneerSelvam

    ×