search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZvsBAN"

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்சென் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவன் கான்வே சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார். டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 89 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

     

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

    • டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்.
    • மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோத இருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.

    இதனிடையே போட்டி காரணமாக சென்னையில் நாளை (அக்டோபர் 13) மெட்ரோ ரெயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போட்டிக்கான டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். ஆனால், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளில் (13.10.2023) இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது.

    • நியூசிலாந்து, தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது.
    • வங்காளதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த 8-ந்தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை 2-வது ஆட்டம் நடக்கிறது. இது உலக கோப்பை போட்டி தொடரின் 9-வது லீக் ஆட்டமாகும். இதில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    நியூசிலாந்து, தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் கான்வே, ரவீந்திரா, வில்யங், மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் போல்ட், ஹென்றி, சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    வங்காளதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. வங்காளதேச அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் பலம் வாய்ந்த நியூசிலாந்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.

    அந்த அணியில் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹூசன் சாண்டோ, முஷ்பிகுர் ரகுமான், மெகதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷொரிபுல் இஸ்லாம் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லக்னோவில் இன்று நடக்கும் 10-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    ×