என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nexon ev max"

    • 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரி வாரண்டி செல்லுபடியாகும்.
    • ஏற்கனேவே இந்த கார்களை வாங்கியவர்களுக்கும் இந்த வாரன்டி பொருந்தும்.

    டாடா Curvv மற்றும் நெக்ஸான் EV கார்களுக்கு லைப் டைம் பேட்டரி வாரண்டியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதாவது கார் ரெஜிஸ்டர் செய்த நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரி வாரண்டி செல்லுபடியாகும். 15 ஆண்டுகளுக்குள் எத்தனை கிமீ ஓட்டியிருந்தாலும் இந்த வாரன்டி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சலுகை இனிமேல் புதிதாக இந்த கார் வாங்குபவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஏற்கனேவே இந்த கார்களை வாங்கியவர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வளர்ந்து வரும் EV சந்தை மற்றும் EV கார்களின் மறு விற்பனையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் EV சீரிசில் புதிதாக நெக்சான் EV மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.
    • நெக்சான் EV மேக்ஸ் உடன் ஸ்டாண்டர்டு நெக்சான் EV மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், நெக்சான் EV மாடலின் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வுக்கு பின் இந்திய சந்தையில் நெக்சான் EV மேக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி உள்ளது.


    இதே போன்று நெக்சான் EV பேஸ் மாடல் துவக்க விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் எந மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 45 ஆயிரம் அதிகம் ஆகும். இதன் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரம் அதிகரித்து தற்போது ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    முன்னதாக இந்திய சந்தையில் பயணிகள் வாகன விலையை 0.55 சதவீதம் உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. விலை உயர்வு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். 

    ×