search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new government"

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மோடி, ஜூன் மாதம் பொறுப்பேற்க போகும் புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்கள் மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய அரசு அமைந்தவுடன், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட செயலர்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும், தேர்தல் நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாய் ஈடுபட்டாலும், அரசுப் பணிகளை வழக்கம் போல் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

    • மாணவர் கூட்டமைப்பு கண்டனம்
    • தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரி திடீரென தமிழ் பாடத்தை நீக்கியது ஏன்?

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் 3 பாடத் துறைகளில் மட்டுமே தமிழ் மொழி இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கு தமிழ் பாடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    எல்லா துறைகளிலும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தை படித்து வந்த சூழ்நிலையில், தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரி திடீரென தமிழ் பாடத்தை நீக்கியது ஏன்?

    பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதுவை மாநிலத்தில் தாய்மொழி தமிழ் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் கட்டாயமாக தமிழ் வரும் என கூறப்படுவது கண்துடைப்பு நாடகம். தாய்மொழிக்கு பெரும் ஆபத்தை அரசு ஏற்படுத்துகிறது. பள்ளி முதல் கல்லூரி வரை தாய்மொழி பாடம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற அரசாணையை அரசு வெளியிடவில்லை.

    வாய் வார்த்தையாக தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்கும் என முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர், கவர்னர் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத்தை முற்றிலுமாக எதிர்ப்போம். மாநில வழி கல்வியை கொண்டு வர வலியு றுத்துவோம். தாய்மொழி அழிப்பை எதிர்த்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மலேசியாவின் பிரதமராக பதவியேற்று கொண்ட அன்றைய தினமே ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மகாதீர் முகமது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #MalaysiaElection #MahathirMohamad #MalaysiaGSTcanceled

    கோலாலம்பூர்:

    நமது நாட்டில் ஏற்கனவே இருந்த மத்திய கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி, சேவை வரி, மாநில வரிகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற புதிய வரி அமல் படுத்தப்பட்டது.

    இதில் உள்ள பல்வேறு குழப்பங்களாலும், கடுமையான சட்டத்திட்டங்களாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த வரி முறைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    இதேபோலத்தான் மலேசியாவில் ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி) 2015-ம் ஆண்டில் மாற்றப்பட்டு புதியதாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டது.

    இந்த வரி முறையில் பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அரசு கண்டு கொள்ளாமல் செயல்படுத்தி வந்தது.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வோம் என்று அறிவித்தது. அதன்படி அந்த கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மகாதீர் முகமது பிரதமர் ஆகி இருக்கிறார்.

    நேற்று பதவி ஏற்றுக் கொண்ட அவர் உடனடியாக ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். மீண்டும் எஸ்.எஸ்.டி. என்ற பழைய வரி முறையே அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். #MalaysiaElection #MahathirMohamad #MalaysiaGSTcanceled

    ×