search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New DSP"

    • கரூர் டவுன் டி.எஸ்.பி.யாக சரவணன் பொறுபேற்று கொண்டார்
    • திருச்சியில் குற்றப்பிரிவில் இருந்த அவர் கரூருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்

    கரூர்,

    கரூர் டவுன் புதிய டி.எஸ்.பி.,யாக சரவணன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். கரூர் டவுன் டி.எஸ்.பி.,யாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்த தேவராஜ், கடலுார் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ். பி., யாக இருந்த சரவணன், கரூர் டவுன் டி.எஸ்.பி., யாக மாற்றப்பட்டார். இவர், நேற்று கரூர் வடிவேல் நகரில் உள்ள, டி.எஸ்.பி., அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அப்போது, கரூர் டவுன் சப்-டிவிசனுக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள், போலீசார், புதிய டி.எஸ்.பி., சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்,



    • புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய டி.எஸ்.பி.யாக குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த அசோக் புளியங்குடி உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். இவரது மனைவி தனுஷியா தென்காசியில் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணி புரிகிறார்.

    புதிதாக பொறுப்பேற்று கொண்ட டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ×