search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai fishermen"

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இலங்கை குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. #SriLankablasts
    திசையன்விளை:

    ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் 3 கிறிஸ்தவ தேவாலயத்திலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் குண்டு வெடித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உலகம் முழுவதும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், தோமையார் புரம், கூட்டப்புளி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் இன்று அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவர் கூட மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் மீன் விற்பனையும் நடைபெறாது.

    இன்று மாலை உவரியில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்று குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த சம்பவத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #SriLankablasts
    தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து போராடிய நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர்.
    திசையன்விளை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட‌னர். இதனால் கடந்த 23-ந் தேதி முதல் இடிந்தகரை, கூத்தென்குழி, உவரி, பெரு மணல் உட்பட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தங்களது நாட்டுப்படகுகளை அவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்ப‌ட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    மற்ற உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ள 6 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர். 10 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள‌னர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×