என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து போராடிய நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
Byமாலை மலர்2 Jun 2018 4:54 AM GMT (Updated: 2 Jun 2018 4:54 AM GMT)
தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து போராடிய நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர்.
திசையன்விளை:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 23-ந் தேதி முதல் இடிந்தகரை, கூத்தென்குழி, உவரி, பெரு மணல் உட்பட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தங்களது நாட்டுப்படகுகளை அவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மற்ற உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ள 6 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர். 10 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 23-ந் தேதி முதல் இடிந்தகரை, கூத்தென்குழி, உவரி, பெரு மணல் உட்பட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தங்களது நாட்டுப்படகுகளை அவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மற்ற உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ள 6 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர். 10 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X