search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthur Regulated Market"

    • 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம் :

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள், ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இவை டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 47 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.10-க்கும், குறைந்தபட்சமாக என ரூ.57.25-க்கும் ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,105 தேங்காய்களும், 13 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டிருந்தது.

    தேங்காய், தேங்காய் பருப்பு 3¼ டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 272-க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளைபொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.65-க்கும் ஏலம் விடப்பட்டது.

    திருப்பூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளைபொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற் றும் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளைபொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட் டார விவசாயிகள் 30 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட் டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.100.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.88.99-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 9 ஆயிரத்து 752 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.35-க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 59 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.65-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 10 சிவப்பு ரக எள் மூட்டைகள் கூடுதலாகவும், 672 தேங்காய்கள் குறைவாகவும், 13 தேங்காய் பருப்பு மூட்டைகள் கூடுத லாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோ கடந்த வாரம் விலையிலும், தேங்காய் 1 கிலோ கடந்த வாரத்தை விட இந்த வாரம் 60 பைசாவும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு 65 பைசாவும் கூடுத லாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 12 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 74 டன் அளவில் மொத்தம் ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 907-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது. இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வை யாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    ×