search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukkodal"

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தையல் எந்திரம், அயன் பாக்ஸ், விவசாய இடு பொருள்கள் மற்றும் விவசாய கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டது.
    • தோட்டக்கலைத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகிலுள்ள வடக்கு அரியநாயகிபுரத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

    சப்-கலெக்டர் ரிஷப் முன்னிலை வகித்தார். முகாமில் மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டு 140 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தையல் எந்திரம், அயன் பாக்ஸ், விவசாய இடு பொருள்கள் மற்றும் விவசாய கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டது.

    முன்னதாக தோட்டக்கலைத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்.

    இதில் திட்ட இயக்குநர் பழனி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரன், துணை தாசில்தார் பால சுப்பிரமணியன், யூனியன் சேர்மன் பூங்கோதை சசிகுமார், துணை சேர்மன் மாரிவண்ணமுத்து, வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் சீனிவாசன், அரியநாயகிபுரம் கூட்டுறவு சங்க தலைவர் செண்பகம், பாப்பாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன், யூனியன் கவுன்சிலர் சோழைமுடிராஜன், பல துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 300 பேர் முகாமில் கலந்து கொண்டனர். 

    • முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள வெள்ள ளோடை கால்வாயும் சுத்தம் செய்யப்பட்டது.
    • மங்கம்மாள் சாலை தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் பேரூராட்சி யில் தூய்மை நகரங்க ளுக்கான மக்கள் இயக்கம் நடவடிக்கையாக நீர்நிலை கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் ராதா தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் லட்சுமணன், செயல் அலுவலர் மாலதி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் சொக்கலால் மேல்நிலை பள்ளி சார ணர் இயக்க மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நீர்நிலைகள், கோரங்குளத்தின் கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

    அதேபோல் முக்கூடல் பேரூராட்சி அலுவ லகத்தின் பின்புறம் உள்ள வெள்ள ளோடை கால்வாயும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மங்கம்மாள் சாலை தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்தல் தொடர்பான சுவ ரொட்டிகள் வரையப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×