என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "'M.Sand'"
- பணகுடியை அடுத்த கூட்டம்புளி பகுதியில் எம்.சாண்ட் மணல் கடத்தப்படுவதாக பழவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மணல் கடத்திய போது தப்பியோடிய 4 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பணகுடியை அடுத்த கூட்டம்புளி பகுதியில் எம்.சாண்ட் மணல் கடத்தப்படுவதாக பழவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் அஞ்சுகிராமம்-உவரி சாலையில் கூட்டாம்புளி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 4 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்து 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து லாரியை சோதனை செய்தனர். அவற்றில் குண்டுகற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை இருந்தன. ஆனால் அவற்றுக்கான உரிய ரசீது இல்லை.
இதையடுத்து போலீசார் 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பணகுடி அருகே உள்ள கைலாசபுரத்தை சேர்ந்த நாகராஜ்(வயது 23), செட்டிகுளத்தை சேர்ந்த சிவக்குமார்(46), குமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்த சிங்(30) என்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து, தப்பியோடிய 4 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்