search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடி அருகே எம்.சாண்ட் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்- 3 பேர் கைது
    X

    பணகுடி அருகே 'எம்.சாண்ட்' மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்- 3 பேர் கைது

    • பணகுடியை அடுத்த கூட்டம்புளி பகுதியில் எம்.சாண்ட் மணல் கடத்தப்படுவதாக பழவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மணல் கடத்திய போது தப்பியோடிய 4 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பணகுடியை அடுத்த கூட்டம்புளி பகுதியில் எம்.சாண்ட் மணல் கடத்தப்படுவதாக பழவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனடியாக நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் அஞ்சுகிராமம்-உவரி சாலையில் கூட்டாம்புளி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்து 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து லாரியை சோதனை செய்தனர். அவற்றில் குண்டுகற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை இருந்தன. ஆனால் அவற்றுக்கான உரிய ரசீது இல்லை.

    இதையடுத்து போலீசார் 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பணகுடி அருகே உள்ள கைலாசபுரத்தை சேர்ந்த நாகராஜ்(வயது 23), செட்டிகுளத்தை சேர்ந்த சிவக்குமார்(46), குமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்த சிங்(30) என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து, தப்பியோடிய 4 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×