என் மலர்
நீங்கள் தேடியது "MP Government"
- நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
- 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.
இந்த மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமான அளவு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
இதை அப்போதே போலீசாரின் குடும்பத்தினர் வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு புத்தாண்டு பரிசாக வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று 400 போலீசார் வார விடுமுறை எடுத்து மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். மாநிலத்தில் மொத்தம் 1 லட்சம் போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
போலீசார் ஏற்கனவே ஈட்டிய விடுப்பு உள்பட மற்ற விடுமுறைகளை எடுத்து வந்தாலும் வார விடுமுறை மட்டும் அனுபவிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டதால் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்தனர்.
போபால் சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா கூறுகையில், நான் 1981-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். இதுவரை வார விடுமுறை எடுக்காமல் பணியாற்றினேன். இப்போது 38 ஆண்டுக்குப்பின் வார விடுமுறை கிடைத்துள்ளது. எனது குடும்பத்துடன் பொழுதை கழித்தேன். சொந்த பணிகளையும் கவனிக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் சர்மா கூறுகையில், ‘‘நான் முதல்முறையாக வார விடுமுறை எடுத்ததும் எனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாலையில் திரும்ப அழைத்து வந்தேன். மற்ற நேரங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தேன். முதல் முறையாக 24 மணிநேரமும் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்’’ என்றார். #Madhyapradesh #Policemen #Holiday






