search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money stole"

    • கைகோலம்பாளையம் அருகே வழிமறித்து பணம் பறிப்பு
    • கோவில்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இளையபாரதி (வயது 23). தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கைகோலம்பாளையம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் இளையபாரதியை தடுந்து நிறுத்தினர்.

    பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளையபாரதியை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.21,900 ரொக்க பணம், 2 பவுன் செயின், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கு இருந்த தப்பிச் சென்றனர். இது குறித்து இளையபாரதி கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் மற்றும் செல்போனை பறித்தது சரவணம்பட்டி, காளப்பட்டி, குனியமுத்தூரை சேர்ந்த 17, 16, 18 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×