search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money robbery in Bank"

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த கனியன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம் மாள்(வயது 50), விவசாயி. இவருக்கு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ராஜம்மாள் மற்றும் ராஜேஷ்சும் தனியாக வசித்து வருகின்றனர். ராஜேஷ் (26), பொக்லைன் டிரைவராக உள்ளார்.

    இந்நிலையில் ராஜம்மாள் நேற்று காலை 7 மணியளவில் வீட் டில் இருந்த மாடுகளை தனது விவசாய நிலத் திற்கு அழைத்துச் சென் றதாக கூறப்படுகிறது. ராஜேஷ் பணிநிமித்தமாக காலை 8 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

    பின்னர், மாலை 5 மணி அளவில் ராஜம் மாள் விவசாய நிலத்தி லிருந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந் துள்ளார்.

    மேலும், வீட் டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ வில் இருந்த ரூ.50 ஆயிரம், மோதிரம், தாலி சரடு, செயின், தங்க வளையல்கள் உட் பட 15 பவுன் நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தக வல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

    பின்னர், வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்க ளை வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுராந்தகம் அருகே வங்கியில் ரூ. 7 லட்சம் பணத்தை கையாடல் செய்த கேஷியரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    காஞ்சீபுரம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி உள்ளது. இங்கு கேஷியராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இங்கு பணிபுரிந்து வந்தார்.

    கிராமப்புற பகுதி என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரியை வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்தனர்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்து இருந்தது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் ரூ. 7 லட்சம் வரை கேஷியர் மோகன் மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    வங்கி கணக்குடன் செல்போன் எண், இ-மெயில் முகவரியை இணைக்காத வாடிக்கையாளர்களை குறி வைத்து அவர் சிறிது, சிறிதாக பணத்தை சுருட்டி இருக்கிறார்.

    இதையடுத்து கேஷியர் மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×