search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளை

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த கனியன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம் மாள்(வயது 50), விவசாயி. இவருக்கு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ராஜம்மாள் மற்றும் ராஜேஷ்சும் தனியாக வசித்து வருகின்றனர். ராஜேஷ் (26), பொக்லைன் டிரைவராக உள்ளார்.

    இந்நிலையில் ராஜம்மாள் நேற்று காலை 7 மணியளவில் வீட் டில் இருந்த மாடுகளை தனது விவசாய நிலத் திற்கு அழைத்துச் சென் றதாக கூறப்படுகிறது. ராஜேஷ் பணிநிமித்தமாக காலை 8 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

    பின்னர், மாலை 5 மணி அளவில் ராஜம் மாள் விவசாய நிலத்தி லிருந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந் துள்ளார்.

    மேலும், வீட் டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ வில் இருந்த ரூ.50 ஆயிரம், மோதிரம், தாலி சரடு, செயின், தங்க வளையல்கள் உட் பட 15 பவுன் நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தக வல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

    பின்னர், வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்க ளை வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×