search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mizo Speaker"

    மிசோரம் மாநிலத்தில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த ஹிபேய் பாஜகவில் இணைந்தார். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். #MizoramSpeaker #MizoSpeakerResigns
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளரான சபாநாயகர் ஹிபேய் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் ஐசாலில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு சென்று பாஜகவில் இணைந்தார்.



    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் இன்று பாஜகவில் இணைந்துள்ளேன். மிசோரமில் அடுத்த ஆட்சி பாஜக தலைமையிலான ஆட்சிதான். கிறிஸ்தவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதை நான் அனுபவபூர்வமாக சொல்கிறேன். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில், அரசியலமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நாட்டை வழிநடத்தும் சக்தியாக மதச்சார்பின்மை நீடிக்கிறது. அதனால் அச்சுறுத்தல் எங்கே உள்ளது?

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினேன். அப்போது, மாரா தன்னாட்சி மாவட்டக் குழுவிற்கு அதிக அதிகாரம் வழங்குவதாக இருவரும் உறுதி அளித்துள்ளனர்.

    அரசியல் உணர்வைப் பொருத்தவரை காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், மிசோரம் காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரின் செயல்பாடுகள் என்னை காயப்படுத்தின. போட்டியிட சீட் கிடைப்பது முக்கியமல்ல, மரியாதைதான் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    50 ஆண்டுகளாக கட்சிப்பணியாற்றிய ஹிபேய் விலகியது காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 5 தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி உள்ளனர். #MizoramSpeaker #MizoSpeakerResigns
    மிசோரம் மாநில சட்டசபை சபாநாயகர் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MizoramSpeaker #MizoSpeakerResigns
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி  பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதற்காக முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாலக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சபாநாயகர் ஹிபேய் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஹிபேய், தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் வழங்கினார். அவருடன் பாஜக மூத்த தலைவர் பிடி சக்மா மற்றும் சிலர் உடன் சென்றனர்.



    இன்று பிற்பகல் ஐசாலில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு செல்லும் ஹிபேய்,  முறைப்படி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலக் தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளரான ஹிபேய் விலகியது காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. #MizoramSpeaker #MizoSpeakerResigns
    ×