search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing young woman"

    • இவர் தனது குடும்பத்துடன் வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
    • வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் எழில் மனைவி ரஞ்சனி(24). இவர்கள் மகன் பிரனித்ராஜ்(6). எழில் பெங்களூரில் என்ஜீயனராக பணிபுரிந்து வருகிறார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ரஞ்சனி தனது குழந்தையுடன் சொந்தஊருக்கு வந்தார். அவரை அருகில் இருந்து கவனித்து வந்தநிலையில் மகனுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேற்கு வங்காளம் மாநிலம் பரதமன் மாவட்டம் பரகாச்சியை சேர்ந்தவர் ஸ்ரீபாஸ்தாஸ். இவர் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் குள்ளப்புரம் பகுதியில் உள்ள வராகநதி அருகே கூட்டுகுடிநீர் திட்டத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆற்றங்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீபாஸ்தாசின் மகள் ஸ்ரேயாதாஸ் திடீரென மாயமானார். அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா என தெரியவில்லை. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறையி னருக்கும் தகவல் தெரிவித்து அவர்கள் வராக நதியில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரூ.2¾ லட்சத்துடன் இளம்பெண் குழந்தையுடன் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி ஐ.ஓ.பி. நகரைச் சேர்ந்தவர் மதுமோகன்ராஜ் (வயது27). தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு சுஜாதா (24) என்ற மனைவியும், ஜவான் நாராயணன் என்ற 10 மாத கைக்குழந்தையும் உள்ளது.

    சம்பவத்தன்று சுஜாதா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த மதுமோகன்ராஜ் மற்றும் உறவினர்கள் இருவரையும் பல இடங்களில் தேடினர். ஆனால் பலனில்லை.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் சுஜாதா மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×