என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Thangam Thanarasu"

    • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி நெல்லை வருகை தருகிறார்.
    • கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி மாநாடு வருகிற டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க மாநில இளைஞ ரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    26-ந் தேதி நெல்லை வருகை

    இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், அரசின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றல் உள்ளிட்டவற்றில் அவர் கலந்து கொள்கிறார்.

    அதன்படி தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை முடித்த நிலையில் வருகிற 26-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார்.

    அமைச்சர் ஆய்வு

    இதனை ஒட்டி தேவையான முன்னேற்பாடு களை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பா ளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    அன்றைய தினம் தொடக்க நிகழ்ச்சியாக கே.டி.சி. நகர் மேம்பாலம் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் மேடை அரங்கு அமைக்கப்பட்டு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதை முன்னிட்டு இந்த 2 இடங்களையும் ஆய்வு செய்ய இன்று நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு நெல்லை வருகை தந்தார். அவரை மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

    தொடர்ந்து அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள மாதா மாளிகை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மேடைகள் அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர். ராஜூ, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மா வட்ட துணைச் செயலாளர் எஸ்.வி. சுரேஷ், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி, மா வட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாநகர இளை ஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் கருப்பசாமி கோட்டை யப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பா ளர்கள் செல்ல துரை, வீரபாண்டியன், ராதாபுரம் ஒன்றிய இளை ஞரணி விஜயாபதி ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×