search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anita Radhakrishnan"

    • ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.
    • தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி தொடக்க விழா இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்தது.

    விழாவில் தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் தி.மு.க. விளம்பரத்தில் சீன தேசிய கொடி இடம்பெற்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் சிறிய தவறு நடந்துவிட்டது. இது தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது என்றார்.

    ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான்.

    அதன்பிறகு எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் குரல் கொடுத்தனர். அதனால் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.

    ஒரு அரசு விழாவில் திட்டத்தையும் பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களையும் பற்றி பேசுவார்களே தவிர அரசியல் பற்றி பேச மாட்டார்கள். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அரசியல் பேசியுள்ளார் என்றார்.

    மேலும் தி.மு.க. தனித்து நின்றால் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்ற அண்ணாமலை கேள்விக்கு பதில் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், எங்களது கனிமொழி எம்.பி. மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதற்கு பதில் கூறியுள்ளார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனோஸ்டன் . இவர் படகை கடற்கரையில் நிலை நிறுத்தும்போது அலையின் வேகம் காரணமாக அந்த படகு ஜெனோஸ்டன் மீது பலமாக மோதியது.
    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனோஸ்டன் (வயது 23). இவர் படகை கடற்கரையில் நிலை நிறுத்தும்போது அலையின் வேகம் காரணமாக அந்த படகு ஜெனோஸ்டன் மீது பலமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது குடும்பத்தினரை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் வழங்கினார்.

    மேலும் அரசு உதவிகளை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது அவருடன் தி.மு.க. முன்னாள் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு ரங்கநாதன், சிங்கித்துறை ஊர் தலைவர் அன்றன், வார்டு கவுன்சிலர் அஜ்வாது, நகர தி.மு.க இளைஞரணி செயலாளர் கலிலூர் ரகுமான் ஆகியோர் இருந்தனர்

    • ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப்பிக்க ரூ.300 கோடியும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ரூ. 30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய அவைத்தலைவர் கோவில் ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருபா, காந்தி இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 410 பேருக்கு இலவச தையல் மிஷின்கள் மற்றும் கிரைண்டர்கள், வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    காமராஜர் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏழை- எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். தி.மு.க.வை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. சாதி, திராவிட கொள்கை கொண்ட தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருக்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.

    மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப்பிக்க ரூ.300 கோடியும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ரூ. 30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பவுர்ணமி தோறும் 12 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் மக்களுக்காக உழைக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் மண்ணை இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் பேசினர்.

    முன்னதாக மாவட்ட பிரதிநிதி ரகுபதி வரவேற்று பேசினார். மாநில மாணவரணி அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், சாத்தான்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், நகர செயலாளர் மகா இளங்கோ, ஆழ்வை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், கருங்குளம் ஒன்றிய முன்னாள் செயலாளர் நல்லமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் மணி, முருகன், சரவணன், பாஸ்கர், ஒன்றிய பொருளாளர்கள் வடிவேலு, செல்வராஜ், ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் சுந்தர்ராஜ் உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பார்த்திபன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கிளைச் செயலாளர் ஞான ஜேம்ஸ் நன்றி கூறினார்.

    ×