search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mineral resources Robbery"

    • மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
    • அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மத்திய அரசின் நிதி உதவியோடு தாராபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பயன்படுத்தாமல் வேறு நகரத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.உடனடியாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தாராபுரத்தில் மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×