search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorial Day Observance"

    • நெல்லை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக் கப்பட்டது.

    இதையொட்டி நெல்லை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் முரளி ராஜா, வக்கீல் காமராஜ், வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டல தலைவர் கெங்கராஜ், ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட துணைத்தலைவர் அருள்ராஜ் மற்றும பலர் கலந்து கொண்டனர்.

    மேயர் சரவணன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகி சரத்மணி மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் தருவை செல்லத்துரை, முத்தூர் நயினார், குன்னத்தூர் நயினார், எல்.எஸ்.லட்சு மணன், அமைப்பு செய லாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்றம் பெரிய பெருமாள், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், ஜெனி, திருத்து சின்னத்துரை, சண்முக குமார், சக்தி குமார், காந்தி வெங்கடாஜலம், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், வக்கீல் ஜெயபாலன், முன்னாள் பகுதி செயலாளர் தச்சை மாதவன், ஒன்றிய செய லாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராம சுப்பிரமணியம், நிர்வாகிகள் பாறையடி மணி, சீனி முகமதுசேட், அன்பு அங்கப்பன், டால் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தட்சண மாற நாடார் சங்கம்

    தட்சண மாற நாடார் சங்கம் தலைமை அலுவல கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார் தலைமையில், பொருளாளர் செல்வராஜ் நாடார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் காமராஜ் நாடார், இசக்கி முத்து என்ற அசோகன் நாடார், நயினார் நாடார், கோல்டன் செல்வராஜ் நாடார், கருணாகரன் நாடார், மும்பை கிளை சங்க செயலாளர் மைக்கிள் ஜார்ஜ் நாடார், நிர்வாக சபை உறுப்பினர் கோபால் ராஜ் நாடார், சங்க மேலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • எம்.எல்.ஏ. செந்தில்குமார் பங்கேற்பு
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் 7 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமார் கலந்துக் கொண்டு அப்துல்கலாம் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து நகர அதிமுக செயலாளர் சதாசிவம், உதேயந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன், நகர பொருளாளர் தன்ராஜ், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தென்னரசு, நியூடவுன் பி. சங்கர், வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தாசாமி, ராமசாமி, சிவானந்தம், செல்வராஜ் மற்றும் நகர, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×