search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor's inspection"

    • விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் தலா ரூ. 24.96 மதிப்பீட்டில் பூச்சி நாயக்கன்பட்டி, சவேரியார் பாளையம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ஹசீனா பர்வீன், உதவி பொறியாளர் சத்யா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

    • 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில்

    மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளு டன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியும், பணிகளை நேரடியாக சென்றும் ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வெள்ளியங்காடு நால்ரோடு மற்றும் 60 அடி சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.

    அப்போது முடிக்க படாத பணிகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • திருப்பூர் மாநகராட்சி 46 மற்றும் 49 வது வார்டு தார்ச்சாலைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ணை மேயர் பாலசுப்ரமணியம் சார்பில் குப்பை கொட்டும் ட்ரம்கள் மற்றும் செடிகளை சுத்தம் செய்யும் கருவி ஆகியவற்றை வழங்கினர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பழுதான சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 46 மற்றும் 49 வது வார்டு பகுதிகளான மணியக்காரம்பாளையம்,ராக்கியாபாளையம் ரோடு, பாரதிநகரில் தார்ச்சாலைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலைப்பணிகளை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது சாலைகளின் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்துபொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

     அதேபோல் வாவிபாளையம் தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் துணை மேயர் பாலசுப்ரமணியம் சார்பில் குப்பை கொட்டும் ட்ரம்கள் மற்றும் செடிகளை சுத்தம் செய்யும் கருவி ஆகியவற்றை வழங்கினர்.மேலும் அப்பகுதியில் அமைத்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் வடிகால் மற்றும் அடிப்படை தேவைகளை ஆய்வு மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர்.

    ×