search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Inspects"

    • உதவித் தொகை உயர்வு ஆகிய திட்டங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • அம்மா உணவகம் மற்றும் கணினி வரி வசூல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் மண்டலம்-3, குமரன் வணிகவளாகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க விளம்பரத்தட்டிகளை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்விளம்பரங்களில் நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம்,கட்டணமில்லா பேருந்து, காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மின்வாகனப் பூங்கா, கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழடிஅருங்காட்சியகம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், புதிய பேருந்துவாங்குதல், பழைய பேருந்து புதுப்பித்தல், விவசாய மின் இணைப்புகள், கலைஞர்நூற்றாண்டு நூலகம், தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) நவீன தரத்திற்குஉயர்த்துதல், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி,மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்வு ஆகிய திட்டங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் குமரன் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம்மற்றும் கணினி வரி வசூல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், "ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி" குறித்த சாதனை விளக்கவிளம்பரங்கள் மாநகராட்சி அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், கலைஞர்பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம்,மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மின்னணுத் திரைகளில் பொது மக்கள் அறிந்துபயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்(பொறுப்பு) கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நூற்றுக்கணக்கான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • புதிய சாலைப் பணிகளையும், பழைய பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நூற்றுக்கணக்கான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டு திட்டங்கள் விரைவாக நடைபெற அதிகாரிகளுக்கு உத்தர விட்டு வருகிறார்.

    இந்நிலையில் பிரையன்ட் நகர், மாசிலா மணிபுரம், செல்சீனி காலனி, ஸ்டேட் பேங்க் காலனியில் நடை பெற்று வரும் புதிய சாலைப் பணிகளையும், புதுபிக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் பழைய பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து புதிய பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்று வரும் புதிய கழிப்பறை மற்றும் அதன் அருகே உள்ள கலைஞர் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் நடைபெற்று வரும் சுத்தப்படுத்தும் பணிகளையும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மேயருடன் துறை சார்ந்த அதி காரிகள் அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    ×