என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mattuthavani"
- மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா சிக்கியது.
- 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெங்களூர் கைலாஷ் குமாரை தேடி வருகின்றனர்.
மதுரை
மாட்டுத்தாவணி போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தனர்.அவர்களிடம் 8 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் தெற்குவாசல் பாண்டிய வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சையது இப்ராஹிம் (வயது23), சோலை அழகுபுரம் குருசாமி மகன் சசிகுமார்(18), ஒத்தப்பட்டி காட்டு நாயக்கர் தெரு தினகரன் மகன் சுந்தரபாண்டி(19) என்பது தெரிய வந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய எண்ணூர் வள்ளுவர் நகர், மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணமூர்த்தியை தேடி வருகின்றனர். தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். ரைபிள் கிளப் அருகே 7 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதற்கிடையே ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது 830 கிலோ குட்கா, 7 செல்போன்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
6 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரித்தனர். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சித்தூர் காசிராமன்(28), தர்மபுரி மாவட்டம், நாகமரத்துபள்ளம் விக்ரம் ( 35), தர்மபுரி சித்தநல்லி தயாநிதி (32), சிங்கம்புணரி சுந்தரம் நகர், கதிரவன் (42), சிவகங்கை மாவட்டம், மணப்பட்டி வெள்ளைச்சாமி ( 42), திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிப்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு சக்திவேல் மகன் ஹரிஷ்பாபு (20) என்பது தெரியவந்தது.
6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெங்களூர் கைலாஷ் குமாரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்