search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matchbox factories"

    • கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
    • போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கோவில்பட்டி:

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

    ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    இருந்த போதிலும் சீனாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இந்நிலையில் இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இந்த போராட்டம் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் பகுதி மற்றும் முழு எந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து முழு அடைப்புக்கு ஆதரவாக கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
    கோவில்பட்டி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களான மெழுகு, பொட்டாசியம் குளோரைடு, தீப்பெட்டி அட்டை, குச்சி ஆகியவற்றையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்ததாலும், போதிய விற்பனை விலை கிடைக்கவில்லை.

    இதனை கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்ததாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், இளையரசனேந்தல், கடம்பூர் மற்றும் வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகளும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மூடப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் உள்ள 20 முழு எந்திர தீப்பெட்டி, 300 பகுதிநேர எந்திர தீப்பெட்டி மற்றும் அதனை சார்ந்து இயங்கும் 2000 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.  #tamilnews
    ×