என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு அடைப்புக்கு ஆதரவாக கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடல்
Byமாலை மலர்10 Sep 2018 12:06 PM GMT (Updated: 10 Sep 2018 12:06 PM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து முழு அடைப்புக்கு ஆதரவாக கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
கோவில்பட்டி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களான மெழுகு, பொட்டாசியம் குளோரைடு, தீப்பெட்டி அட்டை, குச்சி ஆகியவற்றையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்ததாலும், போதிய விற்பனை விலை கிடைக்கவில்லை.
இதனை கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்ததாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், இளையரசனேந்தல், கடம்பூர் மற்றும் வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகளும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 20 முழு எந்திர தீப்பெட்டி, 300 பகுதிநேர எந்திர தீப்பெட்டி மற்றும் அதனை சார்ந்து இயங்கும் 2000 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #tamilnews
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களான மெழுகு, பொட்டாசியம் குளோரைடு, தீப்பெட்டி அட்டை, குச்சி ஆகியவற்றையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்ததாலும், போதிய விற்பனை விலை கிடைக்கவில்லை.
இதனை கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்ததாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், இளையரசனேந்தல், கடம்பூர் மற்றும் வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகளும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 20 முழு எந்திர தீப்பெட்டி, 300 பகுதிநேர எந்திர தீப்பெட்டி மற்றும் அதனை சார்ந்து இயங்கும் 2000 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X