search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "match draw"

    சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
    தேனி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சி.கே.நாயுடு கோப்பைக்கான 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 4 நாட்கள் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 414 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது. 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து இருந்தது.

    4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து களம் இறங்கிய தமிழ்நாடு அணி வீரர்கள் போட்டியை டிராவை நோக்கி கொண்டு செல்லும் போக்கில் ஆடினர். முகுந்த் (54 ரன்), லோகேஸ்வர் (57) ரன் ஆகியோர் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்களில் ஆதித்யா பரூயா 31 ரன்னும், விஷால் வைத்யா 33 ரன்னும் எடுத்து இருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது.

    இந்த போட்டியோடு தமிழ்நாடு அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளது. குஜராத் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா கண்டுள்ளது.
    கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா - டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #DelhiDynamos
    கொச்சி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    பிற்பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் (48-வது நிமிடம்) கேரளா அணியின் வினீத் இடது காலால் பந்தை உதைத்து கோலாக்கினார். 84-வது நிமிடத்தில் டெல்லி அணி வீரர் அன்ட்ரிஜா காலுட்ஜெரோவிச் பதில் கோல் திருப்பினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 2 டிரா கண்டுள்ளது. 3-வது ஆட்டத்தில் களம் கண்ட டெல்லி அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டு இருக்கிறது. ஜாம்ஷெட்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. #ISL2018 #KeralaBlasters #DelhiDynamos
    ×