search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GK Naidu Cricket"

    சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
    தேனி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சி.கே.நாயுடு கோப்பைக்கான 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 4 நாட்கள் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், தமிழ்நாடு-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 414 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது. 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து இருந்தது.

    4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து களம் இறங்கிய தமிழ்நாடு அணி வீரர்கள் போட்டியை டிராவை நோக்கி கொண்டு செல்லும் போக்கில் ஆடினர். முகுந்த் (54 ரன்), லோகேஸ்வர் (57) ரன் ஆகியோர் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்களில் ஆதித்யா பரூயா 31 ரன்னும், விஷால் வைத்யா 33 ரன்னும் எடுத்து இருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது.

    இந்த போட்டியோடு தமிழ்நாடு அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளது. குஜராத் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா கண்டுள்ளது.
    ×