search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marmachav"

    • வீட்டு அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி,

    தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி 2 பேரும் மும்பைக்கு சென்று வசித்து வந்தனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முத்துராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவைக்கு வந்தார்.

    கோவை வடவள்ளி வி.என்.ஆர் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். ராமலட்சுமி கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியாகி கதறி சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவரது கணவரிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று காலை எனது மனைவியிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றேன். பின்னர் வந்து பார்த்த போது தூக்கில் தொங்கி கொண்டிருந்தாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே ராமலட்சுமியின் தந்தை தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முத்துராஜ் தனது மகளை அடித்து கொன்று விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கணவர் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார். ஆனால் கழுத்தில் அதற்கான தடயங்கள் இல்லை. இதனால் நர்சு சாவில் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×