என் மலர்
நீங்கள் தேடியது "Maraimalai Nagar"
- மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் படப்பை அருகே உள்ள சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (வயது 37), ஆத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
- சென்னை மறைமலைநகரில் 42 -வது வணிகர் தினம் 7-வது மாநிலமாநாடு நடைபெற உள்ளது.
- மாநாடு வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும்.
சென்னை:
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் த.ரவி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மே.5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மறைமலைநகரில் 42 -வது வணிகர் தினம் 7-வது மாநிலமாநாடு நடைபெற உள்ளது. சென்னை மறைமலைநகர் நகராட்சி திடலில் மிகபிரமாண்டமாக இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்து உள்ளோம்.
"வணிக விரோத சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு" என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும்.
இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். வணிகர் நலன் கருதி இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு கொளத்தூர் த.ரவி கூறினார்.






