என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Manthan"
- குளிகை நேரத்தில் உண்டியலில் காசு போட்டு வந்தால் பணம் சேரும்.
- 1 ரூபாயை போட்டு முதன் முதலாக தொடங்க வேண்டும்.
ஜோதிடம், நல்ல நேரம் இதில் எல்லாம் நம்பிக்கைகொண்டவரா நீங்கள்? அப்படி என்றால் `குளிகை', `குளிகன்' இந்த பெயர்களை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சரி... அது என்ன குளிகை நேரம்... யார் அந்தக் குளிகன்? `குளிகன் என்ற மாந்தன், சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வன்' என்கிறது புராணம். குளிகனுக்கு, மாந்தி என்ற தங்கையும் உண்டு. குளிகனின் தாயார் ஜேஷ்டாதேவி `தவ்வை' என்று தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்துகொண்டே இருக்கும். அதேபோல, குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனை திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றை செய்வதால், அவை எந்த தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.
குளிகை நேரத்தில் உண்டியலில் காசு போட்டு வந்தால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. எனவே ஒரு உண்டியல் வாங்கி ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணிநேரம் குளிகை காலம் என்று வரும். இந்த ஒன்றரை மணிநேரத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை (உங்களால் முடிந்த) உண்டியலில் தொடர்ந்து போட்டு வரலாம்.
புதிதாக ஒரு உண்டியல் வாங்கி அதில் முதலில் பச்சைகற்பூரம் போட்டு அதன்பிறகு 1 ரூபாயை போட்டு முதன் முதலாக தொடங்க வேண்டும். தினமும் அந்த உண்டியலில் குளிகை காலத்தில் பணம் போட்டு வர வேண்டும்.
உண்டியல் நிரம்பிவிட்டால் அந்த பணத்தை எடுத்து பசு மாட்டிற்கு பழம் வாங்கி கொடுக்க வேண்டும். மீண்டும் அதே உண்டியலில் பணம் சேர்க்கலாம். அல்லது புது உண்டியல் வாங்கி மேலே சொன்ன முறைப்படி தொடர்ந்து சேமிக்க தொடங்கலாம். நிச்சயமாக பணம் அதிகமாக சேரும். செய்து பார்த்து பயன் அடையுங்கள்.
குளிகைநேரம் (பகல்-இரவு)
ஞாயிறு- 3.00 - 04.30; 9.00 - 10.30
திங்கள்- 1.30 - 3.00; 7.30 - 9.00
செவ்வாய்- 12.00 - 1.30; 12.00 - 1.30
புதன் 10.30- 12.00; 3.00 - 4.30
வியாழன்- 9.00 - 10.30; 1.30 - 3.00
வெள்ளி- 7.30 - 9.00; 12.00 - 1.30
சனி- 6.00 - 7.30; 10.30 - 12.00
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்